• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை போக்குவரத்து வாரத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி

January 21, 2020

கோவையில் 31வது சாலை போக்குவரத்து வாரத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக கல்லூரி மாணவர்கள் சென்றனர்.

31வது சாலை போக்குவரத்து வார விழாவானது, தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை வ ஊ சி மைதானத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 600கும் மேற்பட்ட கல்லுரி மாணவர்கள் வ ஊ சி மைதானத்தில் இருந்து துவங்கி அவினாசி சாலை,குப்புசாமி மருத்துவமனை, வழியாக சென்று மகளிர் தொழில்நுட்ப கல்லூரி,காந்திபுரம் வழியாக மீண்டும்
வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், தங்கள் கைகளில் சாலைகளில் சாகசம் வேண்டாம்,மித வேகம் மிக நன்று,தலை கவசம் உயிர் கவசம் போன்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.இந்த பேரணியில் காவல்துறையினர்,அதி விரைவு படைவீரர்கள், ,அனைதிந்தியசுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள்,பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், ,மாநகர குற்றபிரிவு துனை ஆணையர் உமா,,மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்,வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல்,தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க