• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலைப்பணியாளர்கள் இரவில் சமைத்து போராட்டம்

January 25, 2020 தண்டோரா குழு

நெடுஞ்சாலை துறை கோவை மாவட்ட கண்காணிப்பு பொறியாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கோவையில் வெள்ளியன்று ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கோவை வட்ட நெடுஞ்சாலைத்துறை செயல்படுகிறது. இங்குள்ள கோட்டப்பொறியாளர் தொடர்ந்து ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். சட்டத்திற்கு புறம்பாக ஊழியகளின் ஊதியத்தை பிடிப்பது, சட்டப்படியான பலன்களை தர மறுப்பது, திட்டமிட்டே சாலைப்பணியாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பல முறை தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனைத்தொடர்ந்து சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.திருச்சிசாலை கோவை வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்று அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அதிகாரிகள் பேசணுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் ஊழியர்கள் இரவில் பொறியாளர் அலுவலகம் முன்பு சமைத்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க