January 25, 2020
தண்டோரா குழு
நெடுஞ்சாலை துறை கோவை மாவட்ட கண்காணிப்பு பொறியாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கோவையில் வெள்ளியன்று ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கோவை வட்ட நெடுஞ்சாலைத்துறை செயல்படுகிறது. இங்குள்ள கோட்டப்பொறியாளர் தொடர்ந்து ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். சட்டத்திற்கு புறம்பாக ஊழியகளின் ஊதியத்தை பிடிப்பது, சட்டப்படியான பலன்களை தர மறுப்பது, திட்டமிட்டே சாலைப்பணியாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பல முறை தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனைத்தொடர்ந்து சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.திருச்சிசாலை கோவை வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்று அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அதிகாரிகள் பேசணுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் ஊழியர்கள் இரவில் பொறியாளர் அலுவலகம் முன்பு சமைத்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.