• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 3.5 கிலோ தங்க பறிமுதல்

September 6, 2022 தண்டோரா குழு

சார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

சார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதில் 7 பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததையடுத்து அதிகாரிகள் ஏழு பேரையும் தனித்தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்ட போது அதில் செயின்கள், வளையல்கள் மற்றும் பெல்ட் வடிவிலான தங்கத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

ஏழு பேரிடமிருந்தும் 1.83 ரூபாய் மதிப்பிலான 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஏழு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கோழிக்கோட்டைச்சேர்ந்த பிரோஸ் ரகுமான் என்பவரிடமிருந்து மட்டும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க