• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாரமேடு பகுதியில் தமுமுக சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மூலிகை டீ வழங்கல்

June 18, 2021 தண்டோரா குழு

சாரமேடு பகுதியில் தமுமுக சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மூலிகை டீ வழங்கப்பட்டது.

கோவை வடக்கு மாவட்டம் – கிழக்கு பகுதிக்குட்பட்ட 75வது வாா்டு கிளை மற்றும் மாவட்ட இளைஞா் அணி இணைந்து பொதுமக்களுக்கு மூலிகை டீ, முககவசம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்வு தமுமுக-மமக கிளை தலைவா் சிக்கந்தா் தலைமையிலும் மாவட்ட இளைஞரணி செயலாளா் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

வாா்டிற்குட்பட்ட பகுதிகளில் வீடு விடாக கபசுர குடிநீா் வழங்கும் திட்டத்தை தமுமுக-மமக மாவட்ட தலைவா் இ.அஹமது கபீா் துவக்கி வைத்தாா். இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளா் முஜிபுா் ரஹ்மான், மாவட்ட துணை தலைவா் சிராஜ்தீன், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, SMI மாநில துணை செயலாளா் கோவை அம்ஜத், மமக மாவட்ட துணை செயலாளா் பஷீா், தமுமுக மாவட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினா் கவிஞா் ஹக், கிழக்கு பகுதி மமக செயலாளா் ரபீக், கிளை நிா்வாகிகள் சிங்கம் இப்ராஹிம், சலீம், அக்பா் அலி, ஷெரீப், சதாம், நாசா் உள்ளிட்டடோா் கலந்து கொண்டனா்.

இதில் மூலிகை டீ 600 பேருக்கும், கபசுர குடிநீா் 1500 பேருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க