• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் ஆணவ கொலை செய்ய திட்டமா? – கோவையில் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி ரோடு இடையர்பாளையம், லூனா நகர், வித்யாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (35) இந்து முதலியார் சமூகத்தை சேர்தவரும், திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரை சேர்ந்த சுந்தராஜ் என்பவரின் மகள் சக்தி தமிழினி பிரபா (25) தேவேந்திரகுல வேளாளர் சமூகதை சார்ந்த இவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். பெண்ணின் தந்தை உட்பட உறவினர்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளாக இருப்பதாலும் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு வந்தது தற்போது தெரியவதுள்ளது.

இதற்கிடையில் அப்பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்த நிலையில் கார்த்திகேயன் மற்றும் பிரபா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 5-6-20 அன்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறையாக திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த திருமண தகவல்கள் முறையாக இரண்டு வீட்டு பெற்றோருக்கும் தெரிவித்ததில் பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்து விட்டனர். மணமகனின் பெற்றோர் இந்த திருமணத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டதையடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் வடவள்ளி சாலை இடையர்பாளையத்தில் கார்த்திகேயனின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெண்ணின் பெற்றோர்,உறவினர்கள் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை கொடூரமான முறையில் தாக்கிவிட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை வழுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் திருச்சிக்கு காரில் கடத்தி சென்று ஆணவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக கூறும் கார்திகேயன் தரப்பு,பெண்ணை கடத்தி சென்ற அவரின் பெற்றோரை கைது செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. கார்த்திகேயனின் தாயார் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் படிக்க