• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதிசார்பற்ற அரசியல்: சசிகலாவுக்கு திருமாவளவன் பாராட்டு

December 31, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் சாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என்று அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா கூறியதை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற சசிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிகுமார் ஆகியோர் போயஸ்தோட்ட இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தனர்.
அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திருமாவளவன் பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண்ணுரிமைக்கான இயக்கம் என்பதால் அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள, சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

சசிகலாவுடனான சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஜெயலலிதாவிற்கு பிறகு துணிந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதை வரவேற்கின்றோம்.

பெண்ணுரிமைக்கான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்பதால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தில் சாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என சசிகலா உறுதி அளித்ததை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் படிக்க