• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சவாலை ஏற்க பிரதமர் மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம்; களம் காண்போம்: ஹெச்.ராஜா

August 28, 2018 தண்டோரா குழு

சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டார். அப்போது பேசிய முக ஸ்டாலின்,இந்தியா முழுவதும் காவி அடிக்க துடிக்கும் மோடி அரசை விரட்ட வா என்றும் தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பது தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில்,சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என தெரிவித்துள்ளார்.
அப்போது பாஜக தொண்டர் ஒருவர்,ஜீ தொண்டர்கள் நாங்க தெளிவா இருக்கோம், நீங்கள் முன் நின்று எங்களை வழி நடத்துங்கள், நாம் பயணிப்போம்ஹெச்.ராஜாவின் டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ளார். அதற்கு நான் தயாராகவே உள்ளேன். காவிகளின் சக்தியை காட்ட 2.9.18 வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வாருங்கள் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மேலும் படிக்க