• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கோவை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் பேரணி

December 10, 2020 தண்டோரா குழு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கோவை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் அதிக திறன் கொண்ட கே.டி.எம். மோட்டார் பைக்குகளில் பேரணியாக சென்றனர்.

உலகம் முழுவதும் இன்று ஆரஞ்சு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த தினத்தில், ஏற்ற தாழ்வுகள்,ஜாதி மத வேறுபாடுகள் இன்றி சம உரிமை மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள கியர் அப் பைக்கர்ஸ் குழுவை சேர்ந்த பெண்கள் அதி வேக திறன் கொண்ட கே.டி.எம்.பைக்குகளை ஓட்டியபடி ஊர்வலமாக சென்றனர்.

குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ஈகிள் மோட்டார்ஸ் முன்பாக துவங்கிய இந்த இரு சக்கர வாகன பேரணியை அ.தி.மு.க. இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட இணை செயலாளர் சோனாலி பிரதீப் துவக்கி வைத்தார்.முன்னதாக கே.டி.எம்.இன் புதிய வகை அறிமுகமான கே.டி.எம்.அட்வெஞ்சர் 250 ரக மாடல் பைக்கை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.கோவை அவினாசி சாலையில் துவங்கி ஆனைக்கட்டி பகுதி வரை சென்ற இந்த பேரணியில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் அதி வேக பைக்குளை ஓட்டி சென்றனர்.

மேலும் படிக்க