• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் -2022 விண்ணப்பிக்க வரவேற்கிறது

July 20, 2022 தண்டோரா குழு

சரோஜினி தாமோதரன் நிறுவனம் S.D. ஷிபுலால்,(இன்போசிஸ்) குமாரி ஷிபுலால், (காப்பாளர்) கட்டமைப்பு பெற்று உதவிப்பணம் நிகழ்ச்சியின் விண்ணப்பங்களை வரவேற்கிறது. உதவிப்பணம் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் பத்து வகுப்பினை நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் உதவிப்பணம் பெறும் திட்டம் -2022 :

இந்த உதவிப்பணம் பெறும் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் கீழ் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.பத்தாம் வகுப்பு 2022 பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் மேலும் ,உடல் ஊனமுற்றோருக்கு 60% மதிப்பெண்களுக்கு மேலும் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் August 15 , 2022 க்கு முன் விண்ணப்பிக்கலாம்.

சரோஜினி தாமோதரன் நிறுவனத்தின் காப்பாளர் குமாரி ஷிபுலால்கூறுவதாவது,

” ஒவ்வொரு தேர்ச்சியடையும் ஆண்டுக்கும் , எங்களின் உழைப்பு ஒவ்வொரு சமுதாய அடிநிலை வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி பயிலும் உரிமையினை கொடுத்து வருகிறோம் . கல்வி எனபது வாழ்வின் கடவுச்சீட்டு என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் தகவலுக்கு vidyadhan.tamilnadu@ sdfoundationindia.com என்னும் முகவரிக்கு எழுதுங்கள் அல்லது 07339659929/8792459646 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க