• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சம்பளம் வழங்குவதில் தாமதம்; தூய்மைப் பணியாளர்கள் அவதி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

August 11, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இம்மாதத்திற்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததது. ஆனால் கடந்த சில மாதங்களாக தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் 10ம் தேதிக்குள் வழங்கப்படுவதில்லை. மிகவும் தாமதமாக 20ம் தேதிக்கு மேல்தான் வழங்கப்பட்டு வருகிறது என தூய்மைப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே இம்மாதம் 10ம் தேதி கடந்தும் கூட தற்போது வரை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில்,

‘‘ஒவ்வொரு மாதம் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். வீட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதிலிருந்து, வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது வரை மிகவும் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து உடனடியாக சம்பளத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.

மேலும் படிக்க