• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைதளங்களில் அவதூறு : நடவடிக்கை கோரி திமுக மகளிரணியினர் புகார்

March 27, 2018 தண்டோரா குழு

சமூக வலைதளங்களில் திமுக மகளிரணியினர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் திமுக மகளிரணியினர் இன்று(மார்ச் 27)  புகார் அளித்தனர்.

திமுக மகளிர் அணியினரை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க வினர் அவதூறாக பேசுவதாகவும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது.

கடந்த வாரம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டது போல் உள்ள புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதும் பா.ஜ.கவை சேர்ந்த ராமா,ஜெகதீசன் என்ற இருவரும் புகைப்படத்தில் இருக்கும் திமுக மகளிரணியை சேர்ந்த பெண்களை தரக்குறைவாக பேசியிருப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.புகார் மனுவுடன்,முகநூலில் அவறூதாக பேசியிருக்கும் நகலையும் இணைத்து கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவிடம் புகார் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க