• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமூக இடைவெளியை பின்பற்றாமல் வேலைக்கு ஆட்களை எடுத்த தனியார் நிறுவனம் சீல்

June 23, 2020 தண்டோரா குழு

சமூக இடைவெளியை பின்பற்றாமல் வேலைக்கு ஆட்களை எடுத்த தனியார் நிறுவனம் அரசு அதிகாரிகளால் மூடப்பட்டது.

கோவை கணபதி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் (எம் இந்தியா ஆன்லைன் டெவலப்பர்ஸ்) நிறுவன வேலைக்கு ஆட்களை தேவை என்றும் நேர்முக தேர்வு உள்ளது என்றும் வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்துள்ளது. இதற்காக கோவையில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்விற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் தேர்வு நடத்தப்பட்டதென வடக்கு வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நெரில் சென்ற வட்டாட்சியர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் உடனடியாக நேர்முக தேர்வை நிறுத்த வேண்டும் என்றும் அங்குள்ளவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டார். அதன் பின் அந்த நிறுவனம் மூடபட்டு நோட்டிஸ் ஒட்டபட்டது. ஊரடங்கு நேரத்தில் இது போன்று நிறுவனங்கள் ஆட்களை அழைத்து நேர்முக தேர்வு நடத்த கூடாது என்றும் வட்டாட்சியர் கூறினார்.

மேலும் படிக்க