• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமயபுரம் கோவிலில் மதம் பிடித்த யானை மிதித்து பாகன் உயிரிழப்பு

May 25, 2018 தண்டோரா குழு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு மதம் பிடித்தது உதவி பாகனை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே கஜேந்திரன் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை என்பதால் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று கூட்டம் அதிக அளவில் இருந்தது.இந்நிலையில் கோவில் யானை மசினிக்கு திடீரென மதம் பிடித்து தாக்க துவங்கியதில் கோயிலுக்கு வந்த பக்தர்களில் பலர் காயமடைந்துள்ளனர்.யானை விரட்டியதில் தடுமாறி விழுந்த பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.இதையடுத்து யானை சமாதானப்படுத்த முயன்ற பாகன் கஜேந்திரனை யானை மிதித்து கொன்றது.பாகனையே யானை கொன்று விட்டதால், அதனை அடக்க ஆளில்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே யானை தாக்கி பாகன் பலியானதை அடுத்து சமயபுரம் கோயில் நடை அடைக்கப்பட்டது.இதையடுத்து யானையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க