• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் 25 மாநகராட்சி பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் மெஷின்

October 20, 2022 தண்டோரா குழு

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் 25 மாநகராட்சி பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் மெஷின் வழங்கப்பட்டது.

இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்கும் 25 மெஷின்களை கோவையில் செயல்பட்டு வரும் ரன்ஸ் யுவா அறக்கட்டளை கொடையாக வழங்கி வருகிறது.இந்தநிலையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் உயர்நிலை பள்ளியில், அறக்கட்டளையின் நிறுவனர் சிவநேசன் மற்றும் அதன் துணை நிறுவனர் சசிகலா சத்யமூர்த்தி இணைந்து இந்த 25 கருவிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப்விடம் வழங்கினர்.

இது குறித்து அறக்கட்டளையின் துணை நிறுவனர் சசிகலா சத்யமூர்த்தி கூறுகையில்,

மொத்தம் 30 நாப்கின்கள் ஒவ்வொரு சானிட்டரி நாப்கின் வழங்கும் மெஷினிலும் இருக்கும். இவை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் முன்னுரிமை வழங்கப்பட்டு பொருத்தப்படும், பின்னர் மாநகரட்சியின் கோ-எட் பள்ளிகளில் பொருத்தப்படும். நாப்கின்கள் தீருவதற்குள் மீண்டும் அறக்கட்டளை சார்பாகவே நிரப்பப்படும்.
அத்துடன் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்களை இயக்குவது மற்றும் உபயோகப்படுத்த பட்ட நாப்கின்களை எரிப்பது குறித்த தகவலும் விழிப்புணர்வும் பள்ளிகளில் பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும், மேலும் 25 நாப்கின் எரியூட்டும் இயந்திரங்களையும் விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க