January 3, 2020
சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோவை குட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே அமைச்சகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து தென்னக ரயில்வே ஊழியர்கள் ஜனவரி 2 முதல் வரும் 7ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் வரும் 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக கோட்ட தலைமை அலுவலங்களில் பெருந்திறல் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். இந்த நிலையில் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோவை கூட்டு ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை தலைமை கிளைச் செயலாளர் ஜோன் தலைமை வைத்தால் ஏராளமான ஊழியர்கள்
ஊழியர்கள் பங்கேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கும் நோக்கில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.