• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்ட மன்றத் தேர்தலில் ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் – ரஜினி டுவீட்

December 3, 2020 தண்டோரா குழு

அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில்,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி விரைவில் நானே முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.மேலும்,மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்று கூறியுள்ள அவருடைய ட்விட்டர் பதில் இப்போ இல்லைன்னா எப்பவும் இல்ல என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும் என்று ரஜினி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க