• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதாக திமுக முடிவு – மு.க. ஸ்டாலின்

June 2, 2018 தண்டோரா குழு

சட்டப்பேரவை கூட்டத்தில் திங்கள் முதல் மீண்டும் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதா? அல்லது பங்கேற்பதா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது, இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டபேரவை கூட்டத்தொடரில் திங்கள் முதல் மீண்டும் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது. மேலும், ஜூன் 5, 8, 12-ல் திமுக நடத்த இருந்த மாதிரி பேரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை,

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாட தீர்மானம்.

ஜூன் 12-ம் தேதிக்குள் மேட்டூர் அணையில் இருந்து நீரை திறக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

சட்டசபை கூட்டத்தொடரில் திங்கள் முதல் மீண்டும் பங்கேற்பது பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க