ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்றக்கோரிய திமுகவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்தை கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதிசபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சட்டசபையில் இருந்து ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து. அப்போது, சபாநாயகரின் நிர்வாக முடிவில் நீதிமன்றம தலையிட முடியாது என இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட