• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்

April 27, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்றக்கோரிய திமுகவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்தை கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதிசபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சட்டசபையில் இருந்து ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து. அப்போது, சபாநாயகரின் நிர்வாக முடிவில் நீதிமன்றம தலையிட முடியாது என இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க