• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டபேரவையில் டிஜிபி நியமனம் குறித்து ஸ்டாலின் கேள்வி – முதல்வர் விளக்கம்

July 5, 2018 தண்டோரா குழு

டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது முரணாக உள்ளது.டிஜிபி நியமனத்தை ரத்து செய்து,புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி பதவி நீட்டிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.டி.ஜி.பி நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. டி.ஜி.பி பதவி நீடிப்பு காரணமாக பல காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பியாக பதவி உயர்வுகள் பெறாமலே ஓய்வு பெற்றுள்ளனர்.இந்த விவகாரத்தில் அரசு தான் செய்த தவறை உணர்ந்து டி.கே.ராஜேந்திரன் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் டி.ஜி.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரகாஷ் சிங் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.இதனை,அரசு வருங்காலங்களில் பின்பற்றும்.உச்சநீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்புகளை அடிப்படையாக கொண்டு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் படிக்க