• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சச்சிதானந்தா ஜோதி நிகந்தன் சர்வதேச பள்ளியில் விளையாட்டு போட்டி – கோவை எஸ்.பி.பங்கேற்பு !

October 4, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகந்தன் சர்வதேச பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் I.P.S. பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (04.10.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், I.P.S. தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் IPS.மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மேலும்,மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இன்று ஆண்டு விளையாட்டு போட்டி (Annual Sports Meet) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரிநாராயணன், I.P.S தலைமையில் நடைபெற்றது. விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கியும், பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் கவிதாசன். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க