May 29, 2018
தண்டோரா குழு
மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அங்கமாக திகழ்ந்த பி.வி.ராமானுஜம் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சியின் அங்கமாக திகழ்ந்த பி.வி.ராமானுஜம் நேற்று உயிரிழந்தார். முன்னாள் இராணுவ வீரரான இவர் மக்கள் உரிமை கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர். மேலும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஈழ தமிழர்கள் வெளியேற்றாதே என முழக்கமிட்டு இயக்கம் நடத்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.
இந்நிலையில் வயது முதுமை காரணமாக உயிரிழந்த இவரது உடலை இறப்பதற்கு முன் உடலை தானம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் உயிரிழந்த இராமானுஜத்தின் உடலை புரட்சிகர மாணவர் முன்ணனியினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கி கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.