• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உழவர் சந்தையில் முறைகேடு்களை தடுக்க கோரி விவசாயிகள் சங்கம் மனு

March 19, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட உழவர் சந்தையில் ஏற்படும் முறைகேடு்களை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் காய்கறிகளோடு வந்து விவசாயிகள் சங்கம் இன்று(மார்ச் 19)மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூரில் பகுதியில் உழவர் சந்தைகளில் உள்ள குளிர்பாதன கிடங்கை தனியாரின் கட்டுப்பாட்டில் விடாமல் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமென்றும் பொது மக்களுக்க்கும் விவசாயிகளுக்கும் பாதிக்காத வகையில் காய்கறிகளை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும்,உழவர் சந்தையின் நிர்வாக அதிகாரி உரிய நேரத்திற்கு பணிக்கு வராததாலும் தன் பணிகளை செய்யாததாலும் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாகவும்,உழவர் சந்தைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தபட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் காய்கறிகளோடு வந்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க