• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா !

July 24, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபாகோவில் பகுதியில் உள்ள ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா திருக்கோவிலில் நாகசாயி அறக்கட்டளை சார்பாக குரு பூர்ணிமா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி குருபூர்ணிமா விழா நடைபெற்றது.

காலை காகட ஆர்த்தி, அபிஷேகம், ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி,மற்றும் நாகசாய் பஜனுடன் மத்தியான ஆரத்தியுடன் பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.விழா குறித்து நாகசாயி அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,விஸ்வநாத் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் கூறுகையில் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும்,மகா அன்னதானம் இல்லாமல் பக்தர்களுக்கு பிரசாதம் மட்டுமே இந்த ஆண்டு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

குரு பூர்ணிமா விழாவில் கலந்து கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க