• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வைசியாள் வீதி தர்மராஜா கோவில் பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீர் விநியோகம்

June 2, 2021 தண்டோரா குழு

கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக கோவையில் கொரோனா பரவல் மிக தீவிரம் காட்டி வரும் நிலையில்,கோவை வைசியாள் வீதி தர்மராஜா கோவில் அருகே ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ சிவசண்முக பாபுஜி சுவாமிகள் ஏற்பாட்டில், பாஜக உக்கடம் மண்டல் தலைவர் சேகர் தலைமையில், கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 1000 பேருக்கு முக கவசமும் வழங்கப்பட்டது.

கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கபசர குடிநீரை வாங்கி பயன்பெற்றனர்.நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட செயலாளர்கள் கண்மணி பாபு, மோகனா அதிமுக பகுதி கழகச் செயலாளர் கணேஷ், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சபரி கிரீஸ், முன்னாள் கவுன்சிலர் கீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க