• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி தொடங்கியது

February 20, 2018 தண்டோரா குழு

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் புத்தங்களுடன் புத்தக கண்காட்சி  இன்று(பிப் 20)தொடங்கியது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது.இந்த புத்தக கண்காட்சியினை  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் டி. சுதாகர் திறந்து வைத்தார்.

அதன் பின் அவர் பேசுகையில்,

“இந்த புத்தக கண்காட்சியினாது வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் மாணவர்களுக்கு தேவைப்படும் விதமாக அறிவியல் சார்ந்த நிறைய புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் பல்கலைக்கழக நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்து அதை வாங்கவும் திட்டமிட்டுள்ளோம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் இக்கண்காட்சியினை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.

மேலும் படிக்க