• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி அடர்வனம் திட்டம் அறிமுகம்

February 5, 2018 தண்டோரா குழு

கோவையில் குளங்களை பாதுகாக்கும் விதமாக குளக்கரைகளில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்களை பாதுகாக்கும் விதமாக பல்வேறு களப்பணிகளை செய்து வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக கோவையை அடுத்த,வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்திற்கான துவக்க விழா இன்று(பிப் 5) நடைபெற்றது.இதில் சிறிய அளவிலான இடத்தில் அதிக மரங்களை நட்டு வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரங்கள் நடப்பட்டன.

இவ்விழாவில்  இயற்கை ஆர்வலர் அன்பரசன் கலந்து கொண்டு மரங்களை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.மியாவாக்கி் முறையில் பலவகையான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் இதன் மூலம் இந்த அடர்வனங்கள் பலவகை இன பறவைகள் இந்த இடத்திற்கு வர ஏதுவாக அமையும் எனவும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க