• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழா 14 வது பதிப்பு கோலாகல துவக்கம் – ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைப்பு

April 9, 2022 தண்டோரா குழு

கோவை விழாவின் 14வது பதிப்பை, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவை விழா என்பது கோவை நகரத்தின் உணர்வை கொண்டாட கடந்த 13 ஆண்டுகளாக பல அமைப்புகள் மற்றும் கோவை மக்களால் நடத்தப்படும் ஒரு முயற்சியாகும். கோவை மக்களின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் சமூக உணர்வின் வண்ணமயமான கொண்டாட்டத்தை கோவை விழா குறிக்கிறது.

கோவை விழாவின் முதல் நாள் நிகழ்வாக ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கர்ஸ் பாதையில் துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஆர்ட் ஸ்ட்ரீட் என்பது கோவை விழாவின் முக்கிய நிகழ்வாகும். இதில் கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். 75 கலைஞர்கள் மற்றும் 14 பட்டறைகளுடன், ரேஸ் கோர்ஸ் வாக்கர்ஸ் பாதை மிகவும் கலைநயமிக்கதாக இருந்தது.

மேலும் கோவை விழா லோகோவை 14,000 கைரேகைகள் மூலம் வரைந்து உலக சாதனை முயற்சிக்கும் தன்னார்வலர் முயற்சித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ குமரவேலு, அஷ்வின் மனோகர், நிஷித் ஷா, அபிஷேக் கல்ரோ, அவந்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க