• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் 56லட்சம் மதிப்புள்ள தங்க தகட்டுகள் பறிமுதல்0

December 28, 2019 தண்டோரா குழு

ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமான மூலம் கடத்தி வரபட்ட 56லட்சம் மதிப்புள்ள தங்க தகட்டுகளை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு தங்கம் கடத்துவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடயே டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் மும்பையை சேர்ந்த ஸ்ரீ ஜுனட், யூசுப் ஷேக் மற்றும் அஸிம் சஜித் குரேஷி ஆகியோரது உடைமைகளை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அட்டை பெட்டிகளில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 56லட்சம் மதிப்புள்ள 1420 கிராம் தங்கம் தகட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த குற்றம் ஜாமீன் குற்றமாக இருந்ததால், பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க