• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் முன்னாள் தூத்துக்குடி திமுக எம்.பி. பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தம்

November 19, 2018 தண்டோரா குழு

சென்னை செல்வதற்காக நேற்று நள்ளிரவு கோவை விமான நிலையம் வந்த முன்னாள் தூத்துக்குடி திமுக எம்.பி ஜெயதுரை சூட்கேசில் 5 தோட்டாக்களுடன்,பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் திமுக எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரையை வழக்கமாக அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அவர் கொண்டு வந்த சூட்கேசில் 5 தோட்டாக்களுடன்,பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து விமான விதிப்படி இவற்றை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர்.மேலும் ஆயுதம் கொண்டு வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறி அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயதுரை,அவர்களுடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டார்.தான் உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்துள்ளதாக கூறிய அவர் தன்னுடன் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கூறினார்.ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக முடியாது என்று கூறி விட்டனர்

இதையடுத்து அந்தத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தனது உறவினர் ஒருவரிடம் வாங்கி ஒப்படைத்தார் ஜெயதுரை.இதையடுத்து அதிகாரிகள் அவரை மதுரைக்குக் கிளம்ப அனுமதித்தனர்.இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க