• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை லிபாஸ் தையல் பயிற்சி மையத்தின் 15ம் ஆண்டு விழா

February 3, 2018 தண்டோரா குழு

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 14 ஆண்டுகளாக பெண்களுக்கான லிபாஸ் தையல் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பாலிடெக்னிக் வாயிலாக சமூக முன்னேற்றத்திற்கான திட்டத்தின் கீழ் இந்த மையத்தின் மூலம் பயின்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் பயிற்சி மையத்தின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா அண்மையில் கோவை கரும்புக்கடையில் அமைந்துள்ள ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பெண்கள் பிரிவு தலைவர், அஸ்மா பஷீர் தலைமை தங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் S. B. சந்திரன், ஒருங்கிணைப்பாளர்  Dr. தேவராஜன்,
இஸ்லாமிக் கல்வி அறக்கட்டளை செயலாளர் K. அப்துல்லாஹ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மக்கள் தொடர்புச் செயலாளர்,  M. அப்துல் ஹக்கீம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர்.

இவ்விழாவில் இம்மையத்தில் பயின்ற பெண்கள் தங்களது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் குர்ஆன் மொழிபெயர்ப்பும் இஸ்லாமிய புத்தகமும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க