• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை

August 1, 2019

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் எத்திராஜ். மில் அதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களுர் சென்று நேற்று கோவை திரும்பினார். பெங்களூர் செல்லும் போது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவரை வீட்டை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு சென்றுள்ளார்.

ஆனால், அவர் எத்திராஜ் வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளையும் 17 லட்ச ரூபாய் பணத்தையும் திருடி சென்றார்.திருடி சென்ற நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு இரண்டு கோடியே ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.எத்திராஜ் குடும்பத்துடன் பெங்களூர் சென்று விட்டு திரும்பிய போது வீட்டில் இருந்த நகை பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள வீட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவரை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.கடந்த ஐந்தாண்டுகளாக மில் அதிபர் சைலேஷ் வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ்குமார் ராய் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை நம்பி விட்டு விட்டு வெளியூர் சென்ற நிலையில் இந்த திருட்டு நடைபெற்று இருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க