• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரத்தினம் கல்லூரியில் பார்வையாளர்களை கவர்ந்த பேஷன் ஷோ !

March 4, 2020 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரி அருகில் உள்ள ரத்தினம் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் ஆடைவடிவமைப்பு, பேஷன் டெக்னாலஜி படிக்கும் மாணவர்கள் சார்பாக கல்லூரி வளாகத்தில் துறைசார்ந்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விழாவில் ரத்தினம் கல்விகுழுமங்களின் சேர்மன் மதன் செந்தில் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆடை வடிவமைப்பு மற்றும் பேசன் டெக்னாலஜி படிக்கும் மாணவிகளின், பேஷன் ஷோ, அனைவரையும் மிகவும் கவர்ந்தது. ஆடை வடிவமைப்பு துறை மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை குழந்தைகள் அணிந்து அவர்களுடன் ஒய்யாரமாக நடந்துவந்தனர்.

மேலும் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள் ஒளிபரப்பபட்டது. மாணவர்களின் நடனம் மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நடிகை யாசிகா ஆனந்த் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் ரத்தினம் கல்விகுழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் மாணிக்கம் உட்பட, பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

மேலும் படிக்க