June 22, 2020 தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கோவை ரங்கே கவுடர் வீதியில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கோவையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மளிகை பொருட்கள் மொத்த விற்பனை நிறுவனங்கள் அதிகம் உள்ள ரங்கே கவுடர் வீதியில் தூய்மைப் பணியாளர்கள் கிருநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.