• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – மேட்டுப்பாளையம் இடையே 20ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் சேவை

June 18, 2022 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் ரயில் சேவையில், 20ஆம் தேதி முதல் கூடுதல் டிரிப்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கோவையில் காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில்,நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். நண்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரயிலானது, 1.50 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.இரவு 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8 மணிக்கு கோவை சென்றடையும்.

8.25 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், இரவு 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.இந்த ரயில் வடகோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க