May 20, 2021
தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பொதுமக்களின் அவசியம் கருதி கொரோனா பேரிடர் மையத்தை (covid-19 relief care centre) இன்று (20.05.2021) காலை மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சந்தக்கடையில் பேரிடர் உதவி மையம் துவங்கியுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் A.சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் A.காதர் பாட்ஷா, மாவட்ட செயலாளர் A.காஜா மைதீன், நகர செயலாளர் M.சையது அபுதாஹீர் #SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.S ஷபிக் அஹம்மது, கோவை வடக்கு மாவட்ட தலைவர் M.E அப்துல் ஹக்கீம், மேட்டுப்பாளையம் ஜக்கிய ஐமாத் தலைவர் J.முஹம்மது ஷரிப் செயலாளர் அக்பர் அலி, குழந்தைகள் நல மருத்துவர் Dr.முஹம்மது சுஹைல், சித்தா மருத்துவர் N.முஹம்மது ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நகர தலைவர் F.முஹம்மது அப்பாஸ் அவர்கள் நன்றியுரையற்றினார்.
பொதுமக்கள் கொரானா பேரிடர் உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உதவி எண்கள்:
77 08 08 82 00
98 43 43 88 19