• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தடுப்பூசி முகாம்

September 10, 2021 தண்டோரா குழு

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி 6 -வது முகாம் 2 -வது நாள் நடைபெற்றது. 750 பயனாளர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் பி. ஆர். அருள்மொழி தலைமை தாங்கினார்.செயலாளர் கே. கலையரசன், பொருளாளர் டி.ரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத்தலைவர் திருஞானசம்பந்தம், இணைச்செயலாளர் ரீனா, ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம்,முபினா, தங்கராஜ், உதயக்குமார்,ரமேஷ், வைகலாநிதி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.கொரோனா தடுப்பூசி முகாமிற்கு வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர், குமாஸ்தாக்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு நாளைக்கு 750 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென சங்கத்தின் சார்பாக கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெறும் வரும்பொழுது ஆதார் அடையாள அட்டையுடன் வரக்கூடிய நீதிமன்ற ஊழியர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க