• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திற்கு அங்கீகாரம் !

May 5, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கதினை அங்கீகாரம் செய்தமைக்கு அதன் தலைவர் தெய்வ சிகாமணி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் தெய்வ சிகாமணி,

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி வந்துள்ளோம். அதன் பலனாக தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தை அங்கீகாரம் செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கதின் தலைவர் தேவராம், செயலாளர் பழனிசாமி பொருளாளர் ராதாமணி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த வருடம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் 426 தடகள வீரர்கள் கலந்து கொண்டதாகவும் இதில் 170 பேர் தேர்வு செய்யப்பட்டு கரூரில் நடைபெற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 36 பேர் தங்க பதக்கமும் 42 பேர் வெள்ளி பதக்கமும் 27 பேர் வெண்கல பதக்கமும் பெற்றனர். அதை போல் இந்த வருடம் ஜூன் 17ம் தேதி தடகள போட்டி நடைபெறவுள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் போட்டிகள் காலை 8 முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. இதில் 52 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் பங்குபெற விருப்பமுள்ளோர் சங்கத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளவும் எனக் கூறினார்.

இந்த சந்திப்பின்போது செயலாளர் உன்னி கிருஷ்ணன், பொருளாளர் குப்புசாமி, துணைத் தலைவர் கோபாலசாமி, ஆலோசகர் ஜோசப், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க