• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பாக போராட்டம்

June 30, 2022 தண்டோரா குழு

கோவையில் சமூக ஆர்வலர் தீஸ்தா, டெல்லியை சேர்ந்த ஊடகவியாளர் சுபையர் மற்றும் ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ்.ஆகியோரை கைது செய்ததை கண்டித்து கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

குஜராத் கலவரம் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்,ஸ்ரீகுமார் ஐ.ஏ.எஸ் ஊடகவியலாளர் சுபைர் ஆகியோரை கைது செய்யப்பட்டதை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக நாடு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள,பி.எஸ்.என்.எல் . அலுவலகம் முன்பாக கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் மூஸ்தபா தலைமையில் நடைபெற்ற,இதில் மாவட்ட பொதுச்செயலாளர் A.A. அப்துல் காதர் , மாவட்ட பொருளாளர் முகம்மது இக்பால் , மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் , மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக், ஷானவாஸ் , ஏ.ஜே. உசேன் , வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் , தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன போராட்டத்தில் பேசுகையி்ல்,

காந்திநகர் குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும்,தொடர்ந்து இது போன்று அடக்கு முறைகளை ஏவி விடும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.இது போன்று சமூக ஆர்வலர்கள்,ஊடகவியலாளர்கற் கைது நடவடிக்கைகளால் அடக்கு முறையை ஏவி விடும் மத்திய பா.ஜ.க விற்கு எதிராக இந்த கண்டன போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க