• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தற்கொலை முயற்சி

May 28, 2018 தண்டோரா குழு

வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 12 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மற்றும் சுகுனா தம்பதி. அதே பகுதியை சேர்ந்த திருமேணி என்பவர்கள் இவர்களிடம் வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே பகுதியில் வீடு தேவையானவர்களுக்கும் வாரியம் மூலம் வீடு வாங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பி ஜெயகுமார் மற்றும் சுகுனா தம்பதி அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் வசூல் செய்து திருமேணியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,வீட்டு வாசதி வாரியத்தில் வீட்டு வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த பணத்தை ஜெயகுமாரை கொடுக்குமாறு வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தம்பதி, மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இருவரையும் மீட்டு காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.மனு நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க