• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு !

March 7, 2022 தண்டோரா குழு

கந்து வட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று தங்களது பிரச்சனைகளை மனு மூலம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில் அசம்பாவித்தை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு சோதனைக்கு பின்னரே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவர்.

தொடர்ந்து மனு அளிக்க வந்த கோவை போத்தனூரை சேர்ந்த ராஷ்மி,செல்வம் தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.வழக்கம் போல் சோதனை செய்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ராஷ்மி கூறுகையில் எனது அம்மாவான தமிழ்ச்செல்வி கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
தனது அம்மாவின் பெயரில் உள்ள காலிமனையிட பத்திரம் மற்றும் வெற்று வங்கி காசோலை ஆகியவற்றை வைத்துக்கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலி ஆவணம் தயாரித்து போலி கையொப்பமிட்டு பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும்,அந்த நபர்களிடம் இருந்து தன்னையும் தனது அம்மாவையும் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க