• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி சுரங்கம்

April 10, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கிருமி நாசினி ஸ்பிரேயர் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான உழவர் சந்தை, மார்க்கெட் பகுதிகளில் நவீன தானியிங்கி கிருமி நாசினி இயந்திரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர் செல்வதற்கான அனுமதி சீட்டு பெறுவதெற்கென பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் என்டர்பிரனெர்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி துவக்கி வைத்தார்.இதன் வழியாக உள்ளே நுழையும் போது இயந்திரத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரேயரில் இருந்து வரும் கிருமி நாசினி மக்கள் மீது தெளிக்கும். இதற்காக அருகில், பாரல்களில் கிருமி நாசினி மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மின் மோட்டார் மூலம் ஸ்பிரேயருக்கு மருந்து செல்லும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால்,இதன் வழியாக பொதுமக்கள் செல்லும் போது கிருமி நாசினி தெளிக்கப்படுவதால் நோய் பரவாமல் தடுக்க இந்த இயந்திரம் ஏதுவாக இருக்கும் என இதனை நிறுவிய அமைப்பின் தலைவர் ரஜினி காந்த் தெரிவித்தார். இதன் ஒருங்கிணைப்பில் அமைப்பின் நிர்வாகிகள் பிரகாஷ்,அனீஷ்,பென் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க