• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு

April 5, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் இன்று(ஏப் 5)கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல நூறு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அரசு பேருந்துகள் 9௦% வரை இயக்கப்பட்டு வருகிறது.எனினும் வழக்கமாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் சூழலில் இன்று 20% அளவிற்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கர்நாடகா செல்லும் 52 பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும் படிக்க