• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் என்றைக்குமே அதிமுக கோட்டை – எஸ்.பி வேலுமணி

February 28, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து கோவையில் எஸ் பி வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ் பி வேலுணி,

அதிமுக வின் வளர்ச்சி திட்டங்கள் மட்டுமே தற்போது தமிழகத்தில் உள்ளதாகவும், காவல்துறை ஆளுங்கட்சிக்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார். காவல்துறை இந்த போக்கை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பொய்வழக்கு போடுவது வழக்கம் எனவும், சமீப காலமாக காவல்துறையினர் செயல்பாடுகள் வெட்கக் கேடாக உள்ளது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் பரிசுப் பொருட்களை காவல்துறையே மக்களிடம் கொடுத்ததாகவும், வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அதிமுகவிற்கு வந்த ஓட்டுகளை எல்லாம் திமுகவிற்கு விழும் வகையில் வாக்கு பதிவு இயந்திரத்தினை மாற்றி,திமுக வெற்றி பெற்றுள்ளது.ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழக காவல் துறை தற்போது மரியாதை இழந்து விட்டது.

மேலும் வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக வினரை காவல்துறை மிரட்டி வரும் நிலையில்காவல்துறை பயந்து போயுள்ளதாகவும், கோவை மாவட்டம் என்றைக்குமே அதிமுக கோட்டை என
எஸ் பி வேலுமணி பேசியுள்ளார்.

மேலும் படிக்க