• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 890 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

May 28, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 890 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4000க்கும் மேல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநகராட்சியில் மீண்டும் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகால் சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரக பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

து குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தெருக்களில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 890பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 602 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு பொள்ளாச்சியில் 76 பகுதிகளும், மதுக்கரையில் 70 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலேயே குறைவாக கிணத்துக்கடவில் 1 பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க