• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 156 பணியாளர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி

March 26, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 22 ஆயிரத்து 156 பணியாளர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒன்று வீதம் 10 இடங்களில் அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.இந்த வாக்குச்சாவடிகளில் முதன்மை வாக்குச்சாடி மைய அலுவலர்கள் உள்பட 22 ஆயிரத்து 156 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி கடந்த 14-ம் தேதி வழங்கப்பட்டது.

இதையடுத்து கோவையில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களுக்கு சட்ட மன்ற தொகுதிக்கு ஒன்று வீதம் 10 இடங்களில் 2ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது. கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியை கலெக்டர் நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது, பேலட், கண்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் ஆகிய 3 இயந்திரங்களையும் எவ்வாறு இணைப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் எவ்வாறு அதனை சரி செய்வது, கொரோனா தடுப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்து கூறப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் 22,156 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 2-ம் தேதி மூன்றாம் கட்ட இறுதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். 5-ம் தேதி அந்தந்த தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு விடும். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அன்றைய தினமே செல்வார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் படிக்க