• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் இடம் மாறுதல்

November 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள கல்பனா அலமேலு கோவை தெற்கு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்த பணியில் இருந்த சரண்யா, கோவை வடக்கு குடிமை பொருள் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனைமலை வட்டாட்சியராக மாரீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனைமலை வட்டாட்சியராக இருந்த பானுமதி, பொள்ளாச்சி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள முருகேசன் மதுக்கரை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுக்கரை வட்டாட்சியராக இருந்த பர்சானா ஆதி திராவிடர் நலத்துறை நிலை எடுப்பு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்டாட்சியராக நித்தியவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார். வால்பாறை வட்டாட்சியராக ஜோதிபாசு நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் பணியாற்றிய விஜயகுமார் பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் குமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கலால் மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கில் கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த ரமேஷ் தெற்கு தாலுக்கா கலால் மேற்குப் பார்வையாளர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்டாட்சியராக திரிபுரசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். அன்னூர் வட்டாட்சியராக தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் இருந்த சிவக்குமார் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி டி.ஆர்.ஓ வின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுக்கரை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக ரேணுகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு கலால் மேற்பார்வை முன்னாள் அலுவலர் ஜெயசித்ரா சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரங்கராஜன், நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க