• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம்

July 23, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் 350 ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது. சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டு நீர் பாசன கருவி அமைப்பதற்கு வழக்கமான பயிர் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.
தற்போது கூடுதல் மானியமாக ரூ.38 ஆயிரம், தறையின் கீழ் அமைக்கும்போது ரூ.49 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதேபோல் ஆழ்குழாய் கிணற்றில் பயிர் மானியம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.
இதற்கு கூடுதல் மானியமாக ரூ.24 ஆயிரம், தரையின் கீழே அமைக்கும்போது ரூ.36 ஆயிரம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், 3 புகைப்படங்கள், நிலவரைபடம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை உதவி நுண்நீர் பாசன இயக்குனர் 9442635436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க