• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம்

July 23, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் 350 ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது. சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டு நீர் பாசன கருவி அமைப்பதற்கு வழக்கமான பயிர் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.
தற்போது கூடுதல் மானியமாக ரூ.38 ஆயிரம், தறையின் கீழ் அமைக்கும்போது ரூ.49 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதேபோல் ஆழ்குழாய் கிணற்றில் பயிர் மானியம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.
இதற்கு கூடுதல் மானியமாக ரூ.24 ஆயிரம், தரையின் கீழே அமைக்கும்போது ரூ.36 ஆயிரம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், 3 புகைப்படங்கள், நிலவரைபடம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை உதவி நுண்நீர் பாசன இயக்குனர் 9442635436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க