• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்திற்குள் வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் – ஆட்சியர்

May 1, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த
படுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைக்கள் எடுத்து வருகின்றன.மத்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கம் மே 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.அதற்குப் பின் பொது முடக்கம் தளர்த்தப்படுமா அல்லது தொடரப்படுமா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் இதுவரை வெளியிடவில்லை.

இதனிடையே,கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சிவப்பு,ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்கள் நாடு முழுவதும் பிரிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதுமட்டுமின்றி
வெளி மாநிலங்களில் இருக்கும் நபர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அந்தந்த மாநிலங்கள் அழைத்து வரலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களிலிருந்தோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்த படுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த முழு நடவடிக்கையின் பேரில் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்ச் மண்டலமாக கோவை மாறியிருக்கிறது. இதுவரை கோவையில் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்ட 2 பேர் இன்று வீடு திரும்பியுள்ளார்கள்.மொத்தமாக கொரோனா பாதிப்படைந்து அனுமதிக்கப்பட்ட 141 பேரில் தற்போது 7 பேர் மட்டுமே கோவை மாவட்டத்தில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களிலிருந்தோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்த படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க