• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மார்க்கெட்டுகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

April 14, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதி கடைவீதியில் தியாகி குமரன் காய்கறி மார்கெட், உக்கடத்தில் ராமர் கோயில் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட், உக்கடம் – செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள சில்லரை மீன் மார்க்கெட், உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபாகாலனியில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட், அண்ணா மார்க்கெட் போன்றவைகள் உள்ளன.

இந்த மார்க்கெட்டுகளில் தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்த பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்கள், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த மார்க்கெட்டுகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்

,‘‘ மாநகராட்சியில் உள்ள மார்க்கெட்டுகளை மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து, முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் உள்ளிட்ட கொரோனா நோய் தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அரசின் புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் வியாபாரிகளுக்கு எடுத்துக் கூறி வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க திவிர கண்காணிப்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றனர்.

மேலும் படிக்க