• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர பகுதிகளில் பஸ், லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் 30 கிமீ வேகத்தில் தான் இயக்க வேண்டும்

July 27, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதிகளில் பஸ் லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும் போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியிலுள்ள மாநகர காவல் சமுதாயக் கூடத்தில் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆட்டோ உரிமையாளர்களுடன் போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்
போக்குவரத்து துணை ஆணையர்
செந்தில்குமார் பேசும்போது,

30 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் லாரி மற்றும் ஆட்டோக்கள் இயக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் காந்திபுரம் கணபதி 100 அடி ரோடு கிராஸ் கட் ரோடு சுக்ரவார் பேட்டை செல்வபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் சுயகட்டுப்பாடு வாகனங்களை இயக்க வேண்டும். 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டால் சாலை விபத்துகள் மிகவும் குறைந்து விடும்.

மேலும் வாகனங்கள் அதிக வேகம் கொண்டு இயக்கினால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்குமார் எச்சரித்தார்.

மேலும் படிக்க